புதன், 22 டிசம்பர், 2021

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினூடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை

 தமயந்தியின் "ஏழு கடல்கன்னிகள்" 

-கருணாகரன்-

கடினமான கணக்குகளை அறிந்து கொண்டும் அந்தக் கணக்குகளிற்குள் ஊடுருவி, கடந்து சென்ற படைப்பின் உயர்வான கவர்ச்சியாக 'அதற்குள் அவராகவே வாழ்வதால்' சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது.


தமயந்தியின் கதைகள் இயல்பான நேரடித் தன்மை கொண்டவை. இக் கதைகளின் பின்னணியில் இயல்பான கடல்சார் வாழ்க்கை கண்ணோட்டமும், ஈழப்போராட்ட மனிதம் சார் ஏக்கங்களும் அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றது. கதைகள் அனுபவத்தையும், உணர்வு நிலைகளையும் மட்டுமே நம்பியிருக்கின்றன. உண்மை யின் யதார்தங்கள் ஆங்காங்கே எமது நனவிலி மனங்களை கட்டுடைத்து வெள்ளம்போல் நுரைதிரள உப்புக் கலந்த வாசனையோடு எம் நாசிகளை தழுவிச் சொல்கின்றன.