செவ்வாய், 1 மார்ச், 2016

அவளும் நானும், ஆனியும் வடகரையும்

 (2 June 2014)

 புலியன் தீவின் கிழக்காக,
நாகை தீவின் வட கிழக்காக,
ஈச்சாமுனையின் வடக்காக,
நாவட்டக் கல்லின் வடமேற்காக
பவளப் பாறைத் தொடரின்
வடகிழக்காக
அடர்ந்த
சாட்டாமாற்றுச் சோலையின்
பெருமணற் பரப்பில்
யாராலும் அபகரித்துச் செல்ல முடியாத
கரு நீலமும், கரும் பச்சையுமான
தாமரைகளின் மத்தியிலிருந்து
அவள் எழுந்து
அலைகளின் விளிம்பில்
வானத்தை
அண்ணார்ந்து பார்த்தபடி
மல்லாந்து கிடந்தாள்.