செவ்வாய், 27 செப்டம்பர், 2016

வண்ணத்துப்பூச்சிகளை வேட்டையாடுதல் --தமயந்தி-



"ஆறுகள் பெருக்கெடுத்து நீர்கொள்ளாப் பெருங்கடல் கொந்தளித்ததுபோல்
தேவதைகளின் துக்க சமுத்திரம் மட்டில்லாததாய்ப் போயிற்றே...."


துறவிகள்.
இளம், கிழத் துறவிகள்.
அவர்கள் வாழ்ந்தார்கள்.
போருக்கு முன்னும் வாழ்ந்தார்கள்
போருக்கு நடுவிலும் வாழ்ந்தார்கள்
போர் முடிந்தும் வாழ்ந்தார்கள்.
சாயம் கரைந்து வெளிறிப்போன அங்கிகளை
வெள்ளாவிப்பானையில் அவித்து அவித்து
கசங்காமல் நலுங்காமல் அணிந்து திரிந்தார்கள்.