சனி, 7 நவம்பர், 2015

வேதாளம்

இன்றைய எனது முகநூல் பதிவும், அதன் பின்னான குறிப்பும்.


 சஞ்சயனின் வேறொரு விசயம் தொடர்பான பதிவில் நண்பர் பத்மநாதன் "அவதூறு" அரசியல் பற்றிய விசயத்தைத் தொட்டார். அந்த உரையாடலில் நானும் கருத்துச் சொல்லப்போக..... தூங்கிக் கிடந்த வேதாளம் சோம்பல் முறிச்சு எழும்பீட்டுது. அதுதான் இது. 

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

திரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்


(1987ல் மலையாளத்தில் வழங்கிய நேர்காணல்)
தமிழில் : ஷாஜி

கேள்வி : சினிமாவுக்கு ம்யூசிக் தேவையா? சினிமாவில் ம்யூசிக் டைரக்டரின் பங்கு எவ்வளவு முக்கியமானது?
எம் பி எஸ் : ம்யூசிக் டைரக்டர் என்கிற சொல்லாடலே தவறு. இந்திய சினிமாவில் அப்படித்தான் சொல்லப்பட்டு வருகிறது என்றாலும். ம்யூசிக் கம்போஸர் என்றுதான் சொல்லவேண்டும். இசையமைப்பாளரை இசை இயக்குநர் என்று சொல்லல் ஆகாது. சினிமாவில் வேறு வேறு முறைகளில் ஓரளவு இசை தேவை என்றே சொல்லுவேன். ஆனால் எந்த அளவுக்கு என்பது தான் கேள்வி. திரைப்படத்தின் கதை, அதன் பண்பாட்டுப் பின்புலம் போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் அதன் இசை அமைய வேண்டும். நான் இசையமைத்த மலையாளப் படங்களான யவனிகா, உள்க்கடல் போன்றவற்றுக்கு இசை இன்றியமையாதது.
ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேற்றம் போன்ற படத்திற்கு இசையே தேவையில்லை. இந்தியாவின் ஏழை எளிய மக்கள் திரைப்படங்களை நாடுவது பாடல்கள், நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகளுக்காகத் தான் என்று சத்யஜித் ரே ஒரு முறை சொல்லியிருக்கிறார். அது ஒரளவுக்கு உண்மையும் தானே? ஆனால் திரைப்படத்துக்கு இசை தேவையா என்று கேட்டால் அது அந்த படத்தை பொறுத்தது என்றே சொல்வேன். 

சனி, 7 மார்ச், 2015

அறைதற்காலம்


அறைந்தது போக
எஞ்சியிருக்கும் இன்னொரு ஆணியையும்
அறைந்து விடுவதற்கு
காத்திருக்கிறார்கள் சிலுவையின் காலடியில்.