சனி, 14 செப்டம்பர், 2019

மக்களைச் சுடும் பிரச்சனைகளைப் பேச வைக்க வேண்டும்!

சமவுரிமை இயக்கம் "போராட்டம்" பத்திரிகைக்காக
தமயந்தியுடன் ஒரு நேர்காணல்


முன்னாள் போராளி. தமயந்தி என்ற பெயரில் அறியப்பட்ட கவிஞன், புகைப்பட ஓவியன். தற்போது நோர்வேயின் ஓலசுண்ட நகரில் வசித்து வருகிறார். தீவகத்தின் மெலிஞ்சிமுனைக் கிராமத்தைச் சேர்த்த இவர் தனது இளமைக் காலத்திலேயே தேர்ச்சி பெற்ற தென்மோடிக் கூத்துக் கலைஞர். ஆனந்தசீலன், தாவீது கொலியாத், ராஜகுமாரி, புனிதசெபஸ்தியார், மந்திரிகுமரன் போன்ற கூத்துகளில் இவரின் பாட்டும் நடிப்பும் இவரை ஒரு கவனிக்கத் தக்க கூத்துக் கலைஞனாக வெளிக்காட்டியது.

யுத்தம் காரணமாகவும், சமூக அக்கறையற்ற போக்காலும் அழிவுற்று வரும் இலங்கையின் பராம்பரிய கலைகளில் ஒன்றான  தென்மோடிக் கூத்துக் கலைக்கு புத்துயிர்ப்புக் கொடுப்பதுடன், நவீன மயப்படுத்துவதிலும் முன்நிலைச் சக்தியாக செயற்பட்டு வருகிறார் அண்ணாவி சைமன் விமலராஜன் .
சமவுரிமை இயக்கத்தால் ஐப்பசி மாதம் பாரிஸ் நகரில் நடாத்தப்படவிருக்கும் இனமத ஐக்கியத்தை வலியுறுத்தும் அனைத்து இனக் கலைவிழாவில் இவரால் இயற்றப் பெற்ற ஏகலைவன் கூத்து மேடை ஏற்றப்படவுள்ளது. இதையொட்டி போராட்டம் பத்திரிகை அவருடன் உரையாடிய சில மணிகளின் தொகுப்பு.

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

"ஏகலைவன்" மீளுருவாக்கம்


தெணியான்
07/06/2015 

"நான் அறிந்தவரையில் இதுவரை வெளிவந்த பிரதிகளுள் தமயந்தியின் பிரதி மிக வித்தியாசமானது. ஆழ்ந்த சமூக நோக்குடையது. இதற்கு முன்னர் வெளி வந்திருக்கும் பிரதிகள் ஏதோ வகையில் ஏகலைவன் துரோணரின் துரோகச் செயலுக்குப் பலியாவதையே எடுத்துப் பேசுகின்றன. அதேசமயம் முற்போக்கான சில சிந்தனையுடன் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. ஆனால் தமயந்தியின் பிரதி காலத்துக்கும், சமூக மாற்றத்துக்கும் தகுந்த வகையில் ஒரு பாய்ச்சலாக மீளுருவாக்கம் செய்யப் பெற்றுள்ளது".


வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நீளும் துயரத்தில் ஒரு வரலாற்றுப் பதிவு

ஏகலைவன்! 

-செல்வம் அருளானந்தம்- 


சென்ற மாதத்தில் ஒரு நாள் "நாவாய் ஒளி" என்கின்ற ஒரு கலை நிகழ்வுக்கு செல்கின்ற வாய்ப்புக் கிடைத்தது.