ஞாயிறு, 20 ஜூலை, 2014

கூழ்முட்டை ஓவியம்

(சுவடுகள், கார்த்திகை-1989) 


பல வர்ணங்கள்
பல வடிவங்கள்
நிறையத் தலைகள்
நிறையவே கை கால்கள்


நாங்கள்
வரைந்த ஓவியம்
புதினமானதும் நூதனமானதும்
நவீனமானதும் கூட.

சிரமப்பட்டு
மிக மிகச் சிரமப்ட்டு
ஓவியம் வரைந்தோம்

என்ன செய்வது...?
கூழ்முட்டையின் ஓட்டில்
ஓவியத்தை வரைந்தோம்
தவறு எம் மேல்த்தான்
இப்போ உடைந்து விட்டது
சகிக்க முடியவில்லை
நாறுகிறது.

கைகள் கால்கள்
தொட்ட இடம், பட்ட இடம் எல்லாமே
நாறுகிறது.

தமயந்தி-  (11.தை-1989) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக