சுவடுகள்-77 (ஜனவரி 1997)
வண்டிற் பாதையால்
வளைந்தோடும் மழை நீரில்
அடையும் கஞ்சல்போல்
எனது கனவுகள்
அள்ளுண்டு சென்றன
ஒரு
இரவு வேளையில்
வார்த்தைகள்
கசிந்தன, காய்ந்தன
மாட்டுக்குளம்பிம்பின் மிதிபாட்டில்
நொறுங்கிய மண்ணாங்கட்டிபோல்
வார்த்தைகளை
இழந்தவென் உணர்வுகள்
உதிர்ந்து சிதறின
நான் மட்டும்
செத்துப்போன பின்னும்
சாகாதவனைப்போல்
நடந்தேன்
ஈரத் தெரு நீளம்.
தமயந்தி 08.10.1996
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக