-தமயந்தி- (07.06.2014)
யாரைத் தேடுகிறாய்?
நான் யேசுவைத் தேடுகிறேன்.
எனக்கு நடை பழக்கிய யேசுவைத் தேடுகிறேன்.
கள்ள முதலாளிகளை சாட்டையால் சவட்டிய
அந்த மனிதரைத் தேடுகிறேன்.
ஏதற்கு?
நடுவழியில் என்னை தொலைத்துவிட்டு
தலைமறைவாகி விட்டார்.
எனது கையில் துவக்கைத் தந்து
தனது மந்தைகளை
மேய்ச்சல் தறையில் விடும்படி பணித்து
அவர் மட்டும் தலைமறைவாகி விட்டார்.
இப்போ அவரது சிலுவைகளையும் நானே சுமக்கிறேன்.
மந்தைகள் என்னவாயிற்று?
அவை அந்த மனிதரின் கோத்திரத்தாருக்கு
உணவாயிற்று.
இப்போ எதற்கு யேசுவைத் தேடுகிறாய்?
இந்தச் சிலுவைகளில் இரண்டை
அவர் தோளில் சுமத்த.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக