வெள்ளி, 4 ஜூலை, 2014

கலங்கள் வந்து காட்டும் திசையென

 -தமயந்தி- 5.06.2014)


கலங்கரை விளக்கை
கலங்கடித்துக் கொண்டிருந்தது
பெரும்புயற்காற்றும், பேய்மழையும்.
புயலோயும், மழை சாயும்,
வான் மீளும், திசை காணும் என
காத்திருந்து காத்திருந்து
கலங்கரை விளக்கின் கண்கள்
செத்துக்கொண்டிருந்தன.
கடலேறிப் போன கலங்கள்
கரைமீள வந்தொரு நாள்
காணவத்துப்போன திசை
காட்டும் என எண்ணி
இன்னமும்
இடிந்தழிந்து வீழாமல்
காத்திருக்கிறது கரையில்
கலங்கரை விளக்குவீடு

கண்கள் மெல்ல மெல்ல
மங்கி இருளடைய
நெஞ்சைக் கிழித்தொரு விழி செய்து
கடும் புயலிடை
நம்பிக்கையோடு பார்த்துக் கிடக்கிறது
அலையேறிக் கடல் போன
அத்தனை கலங்களும்
வந்து திசை, வழி சொல்லும் என்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக