புதன், 16 ஜூலை, 2014

வீதிகள் திருத்தப்படலாம்

ஐப்பசி 1996 சுவடுகள்-72


நாம் நடந்த நமது வீதிகள்.
நம்மைச் சுமந்த நமது வீதிகள்.
நமது கைகளின்
முரட்டுப் பிடியினாலேயே
சிதைந்தன, அழிந்தன.


கைகளை உயர்த்தி நாம்
"வெற்றி!" என முழக்கமிட்டபோது
நமது கால்கள்
நிறுக்கப்பட்ட வீதிகளின்
இடிபாடுகளிடையே சிக்குண்டன

பிந்து சேறான கால்களின் வலியால்
இப்போ
உயர்ந்த எமது கரங்களும்
சோர்ந்து போயின.

வீதிகள் விருத்தப் படலாம் என்ற
நம்பிக்கையை மட்டும் சுமக்கும்
நடமாடாப் பிணங்கள் நாம்.

-தமயந்தி- (கெளசல்யன்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக