சனி, 5 ஜூலை, 2014

திருக்காயங்கள்

 -தமயந்தி. (06.06.2014)


பூமியில் ஊர்ந்து திரிந்த அவர்கள்
நீருக்குள் சென்று மறைந்துகொண்டார்கள்.
மிருகங்களும் நீருக்குள் மறைந்திருந்தன
மிருகங்களும் அவர்களும்
நீருக்குள் கைகள் குலுக்கிக்கொண்டபோது
நீர் கொழுந்துவிட்டெரிந்தது

மனிதமிருகங்களாய் மிருகங்களும்
மிருக மனிதராய் மனிதர்களும்
நெருப்பைவிட்டு கரையேறியபோது
ஆகாயத்தை நோக்கி
காற்றாய்ப் பறந்து சென்றது நெருப்பு.

கலந்துபோனவர்கள் கையில் எல்லாமுமானபோது
கரைந்துபோன நீரும்
அணைந்துபோன நெருப்பும்
பறந்துபோன காற்றும்
எங்கோவோர் தேசத்தில்
விண்ணப்பமெழுதிக் கொடுத்துவிட்டு
காத்திருந்தன அகதி அங்கீகாரத்துக்காக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக