சனி, 5 ஜூலை, 2014

கைவிளக்குக் கிராமம்

-தமயந்தி- (28.01.2013) 



அதிகாலைக்கு சற்று முன்னதாக கண் விழித்தபோது
கால்மாட்டில் வந்தமர்ந்திருந்தது
கை விளக்கில் காலமெலாம்
இருட்டை விரட்டிய எனது கிராமம்.


கனவோ என்றேன்,
இல்லை என்றதது.

வந்ததென்ன இந்தக் குளிருக்குள் என்றேன்.

இன்னமும் இருட்டுத்தான்
வெளிக்குமா எப்போவாவதெனக் கேட்டது

செய்தி வெளிப்பதாய்த்தான் சொல்கிறது தாயே.

செய்தியை கனவில் கேட்டாயா,
விழிப்பாயிருக்கும்போது கேட்டாயா மகனே...?

சந்தேகத்தோடு கண்களைக் கசக்கி
விழித்தெழ முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக