தமயந்தி- (09-07-2014)
புல்லம்பாயில் உறங்கிக் கொண்டிருந்தது நிலவு.
விடிவதற்கு சற்று முன்னதாக
ஈராட்டியின் மவுனத்தைக் குலைத்துப்போட்டு
எழுந்து வந்த காற்று
யன்னலை உடைத்து உட் புகுந்தது.
ஆழுறக்கத்திலிருந்த நிலவை அப்படியே
பாயோடு சுருட்டி எடுத்துச் சென்றது அது.
தொட்டதற்கும் ஊழையிடும் தெரிநாய்களில்
ஒரு நாய்தன்னும்
குரைக்கவுமில்லை, தடுக்கவுமில்லை
அசுமாத்தம் எதுவுமில்லை.
காலைச் செய்திகள் சொல்லின
வயல்வெளி ஒற்றைமரத்தின் கீழ் நிலவு
இரவிரவாக
குடித்துவிட்டு விழுந்து கிடப்பதாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக