-தமயந்தி- (நன்றி: குவர்னிகா-2013)
வானத்தின் ஏழாவது அடுக்கின்மேலே
அவள் உதறிக் காயப்போட்ட கவிதைக்கும்
பூமியின்
ஏழாவது அடுக்கின் கீழே வெகு நாட்களுக்குமுன்
நான் புதைத்துவைத்திருந்த கவிதைக்கும்
அந்தரப் பரப்பில்
புணர்ச்சி நடந்துமுடிந்த ஏழாவது நிமிடத்தில்
வானத்தினுச்சியிலிருந்து ஒலித்த
அசரீரியின் குரலின் மீதேறி
பசியோடு இறங்கி வந்த புறாவானவர்
நீரின்மீது மடமடவென நடந்தார்
ஒரு சுடுகாரல்கூடக் கிடைக்கவில்லை
ஈரத்தெரு முழுவதுமாக நடந்துபார்த்தார்
ஒருசிறு ரொட்டித்துண்டுதானுங் கிடைக்கவில்லை